search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது பாட்டில்கள் பறிமுதல்"

    • சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது வாகனத்தில் ரகசிய அறை இருந்தது.
    • பிடிபட்ட 4 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு, அக். 21-

    ஈரோடு கொல்லம் பாளையம்-சோலார் பிரிவு அருகே இன்று காலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சரக்கு வாகனம் ஒன்று வந்தது. அந்த வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனையில் ஈடுப்பட்டனர்.

    அந்த வாகனத்தில் 4 பேர் இருந்தனர். அவர்களை விசாரித்த போது அவர்கள் பாண்டிச்சேரியை சேர்ந்த சத்யராஜ், விக்னேஷ், உதயகுமார், செல்வம் என தெரிய வந்தது.

    சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது வாகனத்தில் ரகசிய அறை இருந்தது. அதை திறந்து பார்த்தபோது 42 பெட்டிகளில் 2,016 மது பாட்டில்கள் கடத்திக்கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து மதுவிலக்கு போலீசார் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்ட 4 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தென்கரை பகுதியில் கடையில் மது குடிக்க அனுமதித்த பெண் கைதானார்.
    • அங்கு பதுக்கி வைக்கப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே உள்ள தென்கரை பகுதியில் பீடா கடையுடன் சேர்த்து சில்லி சிக்கன் கடை நடத்தி வருபவர் முனியம்மாள் (வயது 40). இவர் கடையில், மது குடிக்க அனுமதிப்பதாக வீரகனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார், அந்த கடையில் சோதனை நடத்தியதில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்படடது. இது தொடர்பாக முனியம்மாளை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • விழுப்புரம் அருகே லாரியில் கடத்திய ரூ. 15 லட்சம் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • கெங்கிராம்பாளையம் மதுவிலக்கு சோதனை சாவடியில் மதுவிலக்கு போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    புதுவை மாநிலத்திலிருந்து விழுப்புரம், கடலூர் , காஞ்சிபுரத்திற்கு மது பாட்டில்கள் கடத்தல் உள்ளிட்டவை ஏராளமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பதவி ஏற்றதில் இருந்து மது, போதை பொருள்கள் கடத்தல் விற்பனை உள்ளிட்டவைகளை அடியோடு ஒடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.  இந்நிலையில் இன்று அதிகாலை புதுவையில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் வளவனூர் கெங்கிராம்பாளையம் மதுவிலக்கு சோதனை சாவடியில் மதுவிலக்கு போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை போலீசார் நிறுத்த முயற்சித்த போது நிற்காமல் வேகமாக சென்றது. உடனே மதுவிலக போலீசார் சினிமா பாணியில் லாரியை துரத்தி சென்றனர். அப்போது குடுமியான்குப்பம் பகுதி அருகே லாரியை நிறுத்திவிட்டு 2 பேர் பேரும் தப்பித்து சென்றனர்.

    லாரியின் பின்னால் துரத்தி சென்ற போலீசார் சென்று பார்த்தபோது லாரி மட்டும் பள்ளத்தில் இருந்தது. உடனே மதுவிலக்கு போலீசார் சோதனை செய்ததில் லாரியின் உள்ளே நூதன முறையில் 155 அட்டைப்பெட்டியில் புதுவை மது பாட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட போலி மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. உடனே இது குறித்து தகவல் அறிந்த வளவனூர் போலீசார் மற்றும் விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் விழுப்புரம் மதுவிலக்கு போலீசாரிடம் லாரியுடன் போலி மதுபான பாட்டிலும் பறிமுதல் செய்து ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து இதை கடத்தி வந்த நபர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். 

    ×